தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, இதுவரை இல்லாத வகையில் சிறப்பு வாய்ந்த பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு:
தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிறப்பு வாய்ந்த பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனைத் தொடர்ந்து தற்போது, அங்கன்வாடி குழந்தைகளுக்கான முக்கிய திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ஒவ்வொரு கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டம் சென்று சேர வேண்டும் என பேசினார்.
EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் ., ரூ. 81,000 உங்களுக்கு கன்பார்ம்! அடிச்சது பம்பர் லாட்டரி!!
தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கவும், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் இனி 3 முட்டை வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்த அறிவிப்பை கேட்ட பெற்றோர்கள், அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.