வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் பயனருக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள தொகைக்கான வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
பயனர்கள் மகிழ்ச்சி:
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தங்கள் பணி ஓய்வு காலத்தில் பெறும் பென்ஷன் குறித்த கணக்குகளை வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO கவனித்து வருகிறது. இதன் மூலம் பயனடைந்து வரும், 7 கோடி ஊழியர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக குட் நியூஸ் ஒன்றை வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிதி ஆண்டில், EPFO அமைப்பானது வட்டி விகிதத்தை EPF கணக்கு வைத்திருப்பவரின் கணக்கிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக, ஊழியர்களுக்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஒரே தடவையாக ரூ. 72,000 கோடி பணத்தை, அரசு அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்., முதல்வருக்கு பறந்த கோரிக்கை! அரசின் இறுதி முடிவு என்ன?
அந்த வகையில், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் அக்கவுண்டில் 10 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ. 81,000 கிடைக்கும். அதேபோல், 7 லட்சம் இருந்தால் ரூ.56,700, 5 லட்சம் இருந்தால் ரூ. 40,500, 1 லட்சம் இருந்தால் ரூ. 8,100 வட்டியாக கிடைக்கும். இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். மேலும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.