இந்தியாவில் போக்குவரத்து வசதிகளில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ரயிலில் தான் வசதியாகவும், சொகுசாகவும் குறைந்த விலையில் பயணிக்க முடியும் என்பதால் நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது புதிய வசதியை IRCTC அறிமுகம் செய்துள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது, IRCTC தற்போது தன் website ஐ Update செய்துள்ளது. இந்த அப்டேட் அடிப்படையில், ரயிலில் எந்த இருக்கை காலியாக இருந்தால், அதன் நோடிபிகேஷன் பயணிகளின் போன் நம்பருக்கு சென்று விடும். இதன் அடிப்படையில் பயனர்கள், அவர்கள் வசதிக்கேற்ப இருக்கையை புக் செய்து கொள்ளலாம். இந்த நோடிபிகேஷனை பெற வேண்டும் என்றால் பயனர் IRCTC இணையதளத்துக்குச் சென்று புஷ் அறிவிப்பு வசதியை active பண்ண வேண்டும்.
பிக்பாஸ் 6 : போட்டு வையுங்க பா ஒரு ஆறு சீட்ட., இவங்களெல்லாம் வரபோறது கன்பார்ம்!!
மேலும் பயனர் ஒருவர் ஓர் தேதியில் ரயில் பயணம் பிளான் செய்து, அந்த தேதியில் இருக்கை காலியாக இல்லாவிட்டால் பயனர் டிக்கெட் புக் செய்ய மாட்டார். இது போன்ற சமயத்தில், ஏதேனும் ஒரு பயணி டிக்கெட்டை கேன்சல் செய்திருந்தால், அதற்கான நோட்டிபிகேஷன் உங்கள் போனுக்கு வரும்.உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் இந்த டிக்கெட்டை புக் செய்து பயணம் மேற்கொள்ளலாம்.