தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது காதல் குறித்து பொதுவெளியில் மனம் திறந்து பேசிய சம்பவம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா :
தென்னிந்திய நடிகைகளில், டாப் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர் விஜய் உடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, வெளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, தனது வாழ்க்கை அழகானது மற்றும் வெளிப்படையானது .என்னுடைய முன்னாள் காதலர்கள், தற்போதும் தனக்கு நல்ல நண்பர்களாக இருப்பதாகவும், அவர்களின் மனைவிகளை சந்திக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என பேசினார்.
மேலும், நடிகர் விஜய் தேவர கொண்டாவையும் என்னையும் சேர்த்து வைத்து பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார். ராஷ்மிகா மந்தனா தனது காதலர்கள் பற்றி, மனம் திறப்பது இதுவே முதல் முறை என்றும், அதுக்குன்னு இவ்ளோ ஓபனாவா பேசுவீங்க என்றும் நெட்டிசன்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.