தேசிய விளையாட்டு தொடருக்கான தடகள போட்டியில் பாட்டியாலா மற்றும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
மீராபாய் சானு
36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 20 KM தொடர் ஓட்டத்தில் பல வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த வீரர்களுக்கு இடையிலான ஓட்டத்தில் மூன்று வீரர்கள் மட்டும் முதலிடங்களை பிடித்து பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி பாட்டியாலா மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர சிங் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் பன்வார் 2 ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்தீப் சிங் வெண்கல பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானு தங்க பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். பிறகு வெள்ளிப்பதக்கத்தை அதே மாநிலத்தை சேர்ந்த சஞ்சிதா சானு தட்டிச் சென்றார்.