நகையை அடமானம் வைத்து பொன்னியின் செல்வனுக்காக கூல் சுரேஷ் செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!!

0
நகையை அடமானம் வைத்து பொன்னியின் செல்வனுக்காக கூல் சுரேஷ் செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்!!
நகையை அடமானம் வைத்து பொன்னியின் செல்வனுக்காக கூல் சுரேஷ் செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்!!

காமெடி நடிகர் கூல் சுரேஷ் இன்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்கு குதிரையில் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கூல் சுரேஷ் அட்ராசிட்டிஸ்

கோலிவுட்டில் காமெடி நடிகராக விளங்குபவர் தான் நடிகர் கூல் சுரேஷ். சமீபத்தில் வெளியாகி செம்ம ஹிட் ஆன வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்றவர்களில் இவரும் ஒருவர். இதற்காக படத்தோட தயாரிப்பாளர் நடிகர் கூல் சுரேஷ்-க்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூல் சுரேஷ் வித்தியாசமாக சென்றுள்ளார். அதாவது இப்படம் சோழ இளவரசர்களை தழுவி இருப்பதனால் கூல் சுரேஷ் குதிரையில் சென்று முதல் ஷோவை பார்த்துள்ளார். மேலும் குதிரையில் வருவதற்கு நகையை அடமானம் வைத்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் எப்போதும் கூறும் வசனமான, வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு என்று வழக்கம் போல் பேசியுள்ளார். அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் உங்களை வாய்ப்பு கிடைக்காததை நினைத்து வருந்துகிறீர்களா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் இப்போதெல்லாம் எதற்கும் வருத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here