சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங் ஜோடியாக இருக்கும் மகாலட்சுமி-ரவீந்தர் தம்பதிகளுக்கு ரசிகர்கள் முக்கிய அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளனர்.
மகாலட்சுமி-ரவீந்தர்:
தற்போது வெள்ளித்திரை நடிகர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி-இயக்குனர் ரவீந்தர் திருமணம் வேற லெவலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத இவர்கள் திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவர்களை, என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும், அதை எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் பாணியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இந்த ட்ரெண்டிங் ஜோடி கலந்து கொண்டுள்ளனர். இதை பார்த்த அவர்களுடைய தீவிரமான ரசிகர்கள் அங்கே செல்ல வேண்டாம். அங்கே சென்ற பிரபலங்கள் ஒன்று பிரிந்து விடுவார்கள் அல்லது அவர்களுடைய வாழ்க்கையே மாறி விடும். அதனால் நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி அண்மையில் மகாவுக்கு தாலி கோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அங்கு எடுத்த புகைப்படத்தினை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் சிலர் ஏன் இப்படி செய்கிறீர்கள், நீங்கள் புகைப்படங்கள் வெளியிடுவதால் ஏராளமானோர் எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் மகாலட்சுமிக்கு மன நிம்மதி போய்விடும் என்று அறிவுரை கூறும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர்.