துபாயில், பசித்தவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கு ஸ்மார்ட் மிசின்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் மிசின்கள்:
ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலார்களின் பசியை போக்கும் உயர்ந்த எண்ணத்தில் துபாயில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் பல இடங்களில் ஸ்மார்ட் மிசின்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மிசின்கள் மூலம், வேலைக்காக துபாய்க்கு வந்து இருக்கும் வெளிநாட்டவர்கள், பணியாளர்கள் தங்கள் பசியை போக்கி கொள்ளலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஸ்மார்ட் மிசின் இலவசமாக அரபி ரொட்டி மற்றும், ஃபிங்கர் ரோல் ஆகிய இரண்டு வகை ரொட்டிகளை விரைவில் தயாரித்து அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய உணவு திட்டத்திற்கு, பொதுமக்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. அதாவது வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர், கட்டிட வேலை, ஓட்டுனர்கள் ஆகிய வேலைகளை பார்த்து வருகின்றனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு.., தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் தொடங்கியுள்ள ‘சிறப்பு காய்ச்சல் முகாம்’!!
அவர்கள் பசி பட்டினி இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு, இந்த முக்கிய திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் மிசின்கள் கடந்த 17ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் மிசின்கள் , துபாயின், ‘அஸ்வாக்’ என்ற மளிகை கடையின் முன் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.