தமிழகத்தில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை :
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்க, கவுன்சிலிங் வகுப்புகளும் அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் மாணவர்களுக்கான தினசரி வகுப்புகள், தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் சிரமத்தை போக்க அரசு அவர்களுக்கு பொது விடுமுறையை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி பகுதியில் அமைந்துள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு மட்டும், செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்று முழு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த செய்தி, மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.