ரசிகர்கள் கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சொந்த வாழ்க்கையில் பல ஏற்ற இறங்கங்களை சந்தித்தாலும் தன் கேரியரில் வெற்றி நடைபோட்டு வருகிறார். இவர் நாக சைதன்யாவுடன் தன் பிரிவை அறிவித்த பின்னர் பல சர்ச்சை பேச்சுக்கள் இவரை சுற்றி எழுந்த வண்ணம் இருந்தது.
ஆரம்பத்தில் இதனால் சற்று அடி வாங்கிய சமந்தா பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தார். நாம் அனைவரும் சமந்தா பற்றியே யோசித்தோம் தவிர அவரின் அப்பா பற்றி சிந்திக்கவில்லை. பெற்ற பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அவரும் சோகத்தில் உள்ளார். இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது “நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்” என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவில் சமந்தாவின் திருமண போட்டோக்களும் உள்ளது. தற்போது இவரின் பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.