தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா:
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த ராஷ்மிகா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்து கால் பதித்தார். நடிகை தாண்டி இவருக்கு National crush என்ற பெயரும் உண்டு. இவர் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாக பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். அதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
அங்கு வருண் தவான், அமிதாப் பச்சன் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து ‘அனிமல்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக டைகர் ஷெராஃப்புடன் இணைந்து புதிய படத்தில் ராஷ்மிகா நடிக்கவிருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படத்தை கரண் ஜோகர் பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஹிந்தி படங்கள் அனைத்தும் படு பிளாப் ஆகி வருவதால் இப்படத்தை கரண் ஜோகர் எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம். இது பாலிவுட் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.