ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் செய்முறைத் தேர்வில் குறைவான மதிப்பெண் கொடுத்ததற்காக 9-ம் வகுப்பு மாணவர்கள் கணித ஆசிரியர் மற்றும் பள்ளியின் எழுதரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆசிரியர் மீது தாக்குதல்:
தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் சொற்ப காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் நூற்றுக்கு பத்து சதவீதம் ஆசிரியர்கள் மாணவர்களை அவதூறாக திட்டியதாகவும் மற்றும் அடித்ததாகவும் கூறி தற்கொலை முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாணவனின் வாழ்க்கை பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்தே அமைகிறது.
அதற்கு முதல் படியாக இருப்பது ஒன்பதாம் வகுப்பு. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று அண்மையில் எழுதிய செய்முறைத் தேர்வில் கணித ஆசிரியர் சுமன் குமார் வேணும் என்று மதிப்பெண்களை குறைத்தாக முதல்வரிடம் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வகுப்பில் கிட்டத்தட்ட 11 மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். தங்களுக்கு சரியான பதில் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகியையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.