அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்விக்காக 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு புதுமை பெண் திட்டம் என பெயர் வைக்கப்படுள்ளது.
புதுமைப் பெண் திட்டம்:
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த உதவித்தொகை உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு பெரும் உதவியாக அமைந்து வருகிறது. மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு பெயரை அறிமுகப்படுத்த இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது இந்த திட்டத்திற்கு புதுமை பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி பெயர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை தமிழக மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.