அண்மையில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அது போதுமானதாக இல்லை என்று அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் வென்றதா? வீழ்ந்ததா? – ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
அகவிலைப்படி உயர்வு:
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார். அதில் குறிப்பாக அரசு பணியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதாவது அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது, போதுமானதாக இல்லை என்று அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, CPS ரத்து, ஒப்படைப்பு விடுப்பு மீண்டும் வழங்குதல், முன்னாள் மாநிலத் தலைவர் MS அவர்களின் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.