ராஜேஷ் உடன் சேர்ந்து வாழ போகும் ராதிகா, கவலையில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வரும் எபிசோட்!

0
ராஜேஷ் உடன் சேர்ந்து வாழ போகும் ராதிகா, கவலையில் கோபி - 'பாக்கியலட்சுமி' அடுத்து வரும் எபிசோட்!
ராஜேஷ் உடன் சேர்ந்து வாழ போகும் ராதிகா, கவலையில் கோபி - 'பாக்கியலட்சுமி' அடுத்து வரும் எபிசோட்!
ராஜேஷ் உடன் சேர்ந்து வாழ போகும் ராதிகா, கவலையில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வரும் எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டை விட்டு கிளம்புகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பாக்கியாவோ கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதை தொடர்ந்து ராதிகா, ராஜேஷை மன்னித்து ஏற்று கொள்வது போல் அதிரடி ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா டைவர்ஸ் வழங்கியதை கோபியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோர்டில் வைத்து பாக்கியா பேசிய மொத்த பேச்சுக்கும் பதிலடி கொடுக்க வீட்டில் விஸ்வரூபம் எடுக்கிறார் கோபி. மேலும் கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா வீட்டிற்கு வந்த நிலையில், கோபி பாக்கியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் ஜெனி, இனியா, ஈஸ்வரி பாட்டி, செழியன் என எல்லோரும் பாக்கியாவை வீட்டில் இருக்கும்படி கெஞ்சுகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் கோபி எல்லோரையும் தடுக்கிறார். பாக்கியாவின் சொந்த உழைப்பில் வாங்கிய ஒரு பொருள் கூட இந்த வீட்டில் இல்லை என கோபி அசிங்கப்படுத்துகிறார். ஆனால் பாக்கியா எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறார். பதில் பேசவில்லை. இதற்கிடையில் பாக்கியா பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த நிலையில், கோபி பெட்டியை வெளியே தள்ளி விடுகிறார். ஆனால் அதனுள் இருந்த துணிகள் அனைத்தும் கோபியின் துணிகள், இதைக்கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டனர். மேலும் பாக்கியா நான் எதற்காக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும், நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதையடுத்து கோபியின் அப்பாவும் வீட்டை விட்டு கோபியை விரட்டுகிறார்.

இதற்கிடையில் ராதிகா கோபியை- பாக்கியாவை நினைத்து சோகமாக இருக்கிறார். அதாவது கோபி – பாக்கியா இருவருக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டதால், கோபி இங்கே வந்து நம்மை தொந்தரவு செய்வார் என ராதிகா நினைத்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஒரு கனவு ஒன்று வருகிறது, பாக்கியா நேரில் வந்து உங்களுக்கு இப்போ சந்தோஷமா ராதிகா என கேட்பது போல். இதை கண்டு பதற்றம் அடைந்த ராதிகா, யாருக்கோ மெசேஜ் செய்தார். இதற்கிடையில் ராஜேஷ், ராதிகா வீட்டிற்கு வர ராதிகா, இனி நீங்களும் நானும் சேர்ந்து வாழலாம். நமக்கு இடையில் யாரும் இல்லை, என்று கூறுகிறார். அப்போ முன்னதாக ராதிகா ராஜேஷுக்கு தான் மெசேஜ் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி சீரியலில் என்ன நடக்கும் என்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here