தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தானியங்கி பயணச்சீட்டு முறை:
தமிழகத்தில் ஆட்சி பிடித்து பல நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறது திமுக அரசு. தமிழக அரசு அறிவித்த முதல் திட்டமான பெண்கள் இலவச பேருந்து திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதில் முதற்கட்டமாக மூன்று மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தானியங்கி பயணச்சீட்டு முறையை முதற்கட்டமாக சென்னை,மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய தமிழ் நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தானியங்கி பயணச் சீட்டு முறை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.