இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிகமாக பணி வழங்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் முடிவு செய்து இருப்பதாக அதன் துணை தலைவர் அகில் சக்சேனா தெரிவித்து உள்ளார்.
ஆன்லைன் ஷாப்பிங்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய இயலாமல் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள பொழுது, அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு சேர்க்க முடிவு செய்துள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மீண்டும் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் மக்களும் நேரில் சென்று பொருட்களை வாங்க சமூக இடைவெளி (கொரோனா பரவல்) உள்ளிட்ட காரணங்களால் ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும் என அகில் சக்சேனா தெரிவித்து உள்ளார்.
அமேசான் இந்தியாவில் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அதன் மையங்கள் மற்றும் டெலிவரி பிரிவில் பணியமர்த்தப்பட உள்ளனர். அமேசான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை தேவையான நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அளிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உணவு டெலிவரி துறையிலும் கால் வைத்துள்ள அமேசான் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அதன் போட்டி நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |