தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்பதால் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வெயில் சுட்டெரிக்கும்:
தமிழகத்தின் ஈரப்பதத்தை அம்பன் புயல் அதன் கூடவே எடுத்துச் சென்று விட்டது. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாக உள்ளது.இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகபட்சமாக 40 டிகிரி முதல் 42 டிகிரி வரை வெப்பநிலை (107 டிகிரி பாரன்ஹீட்) அளவிற்கு பதிவாகக் கூடும்.
இதனால் அடுத்த 2 தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திறந்த வெளியில் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 மணிவரை வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் இதனால் அடுத்த 5 நாட்களுக்கு அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |