படப்பிடிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள, அவுட்டோர் யூனிட் தொழிலாளர்கள் சினிமா யூனியன் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்டிரைக் அறிவிப்பு :
தமிழகத்தில் 24 வகையான, சினிமா படப்பிடிப்பு குழுக்கள் உள்ளது. இந்த குழுக்களுக்கு தலைமையாக பெப்ஸி என்ற அமைப்பு உள்ளது. இதற்கு தலைமையாக நடிகை ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி இருந்து வருகிறார். இந்த நிலையில், லோக்கல் படப்பிடிப்பின் போது, ஷூட்டிங்கில் ஈடுபடுத்தப்படும் லோக்கல் வாசிகள், கட்டாயம் யூனியனில் சேர வேண்டும் என பெப்சி நிர்வாகம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் இந்த சினிமா சங்கங்களில் சேர 3 லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால், சினிமா யூனியன்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக யூனிட் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, விஜய் அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படங்களின் ஷூட்டிங் வெளியூரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்டிரைக் பிரச்சினை காரணமாக ஷூட்டிங் வேலைகள் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்