உலக நாயகன் கமலின் வீட்டுக்கு சென்று, நடிகர் டி. ராஜேந்திரன் கதறி அழுததன் காரணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கமல் தன் விக்ரம் பட ஆடியோ லாஞ்சில் தெரிவித்துள்ளார்.
புது தகவல்:
உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி அடுத்த மாதம், அதாவது ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள படம் விக்ரம். நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் பத்தல பத்தல என்கிற பாடல் அண்மையில் யூடியூபில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது.
இந்த விழாவில், பேசிய நடிகர் கமல் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் குறித்த முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்ற தகவல் வெளியானதும் டி. ராஜேந்திரன் என் வீட்டுக்கு வந்து என்னிடம் கதறி அழுதார். அதாவது, உங்களால் சினிமா இல்லாமல் எப்படி இருக்க முடியும் என கேட்டார். அந்த கேள்விதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்