சீனா டூ இந்தியா – ஐபோன் உற்பத்தியை இடம் மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டம்..!

0

சீனாவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வரும் ஆப்பிள் நிறுவனம் அதனை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்திய தொழில்துறையில் புதிய வேலைவாய்ப்புகள், முதலீடுகள் உருவாகும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவல்:

சீனாவின் ஹவான் மாகாணத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனவால் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இந்த காரணங்களால் சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை இடம்மாற்ற திட்டமிட்டு உள்ளன. இதனால் சீனாவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு உள்ள ஆப்பிள் நிறுவனம் அதில் 5ல் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஐபோன் உற்பத்தியை செய்து வருகிறது. தற்போது சீனாவில் இருந்து பெரியளவில் ஐபோன் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டால் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஆப்பிள் மாறும்.

4000 கோடி டாலர்:

இந்தியாவில் விஸ்ட்ரான், பாக்ஸ்கான் நிறுவனங்களுடன் இணைந்து கூடுதல் உற்பத்தியை ஆப்பிள் தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 3,04,000 கோடி) மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செய்லபடும் ஆப்பிள் நிறுவனம் கொரோனா வைரசால் சீனா – அமெரிக்கா இடையே ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here