விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது சமைத்து கொடுத்த உணவு சரியில்லை என்று போலீசார் பாக்கியாவை கைது செய்துவிடுகின்றனர். மறுபுறம் ராதிகாவிற்கு ஆறுதல் கூறிக்கொண்டு கோபி தன் வீட்டிற்கு செல்வதையே மறந்து விட்டார்.
ஈஸ்வரி கோபிக்கு போன் செய்தால் மீட்டிங்கில் இருக்கிறேன் வருகிறேன் என பொய் சொல்கிறார். ராதிகாவோ எங்களுக்கு யாரும் இல்லை., இருங்கள் என கோபியை வற்புறுத்த கோபி வேறு வழியில்லாமல் ராதிகா வீட்டிலேயே தங்கிவிடுகிறார். பின்னர் தன் அம்மாவை காப்பாற்ற எழில் பாக்கியா சமைத்து கொடுத்த உணவை வீட்டில் உள்ளவர் சாப்பிட்டும் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை என்பதை கண்டுபிடிக்கிறார்.
இதனால் ஆசிரமத்தில் இருந்து பாக்கியா கொடுத்த உணவை எடுத்து அந்த உணவை டெஸ்ட் செய்யக்கொடுக்கிறார் எழில். போலீசில் இது பற்றி எழில் கூறியும் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்க என்கிறார் போலீஸ். எப்படியும் பாக்கியா தவறு செய்யவில்லை என்பதை எழில் நிரூபிப்பார். இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்