மயிலாடுதுறை வட்டம், பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் தினம் மற்றும் திருவிழா காரணமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, தொடர்ந்து அங்கு 5 நாட்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வயசுலயும் அந்த இடத்துல டாட்டூலாம் தேவையா? – பனியனில் சூடேற்றும் நடிகை கனிகா!!
தொடர் விடுமுறை:
இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும், தாதா சாகிப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் நேற்று சமூகநீதி தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில், மயிலாடுதுறை வட்டம் பட்டவர்த்தி கிராமத்தில், அம்பேத்கர் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்த படுவது வழக்கம். இதே போல், தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி உற்சவம் நடத்தப்படும். இது சம்பந்தமாக, கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சனை வெடித்தது. அதே போல் இந்த ஆண்டும், பிரச்சனை நடந்து விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் ஏப்ரல் 13 காலை 6 மணி முதல் ஏப்ரல் 17 நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினங்களில், இப்பகுதியில் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 2 நபர்களுக்கு மேல் கூடி நிற்க கூடாது என்றும், இந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முழு பொது முடக்கம் காரணமாக இந்த பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்