இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக, விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளைய தினம் நீடிக்கப்படுவது குறித்தான புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
புது விளக்கம்:
நம் அண்டை நாடான இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளது. இதனால், அங்குள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை பன் மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த பதற்றமான சூழல் காரணமாக மார்ச் 31ம் தேதி அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பொது முடக்கத்தை நாளைய தினம் நீட்டிப்பது குறித்த முக்கிய அறிவிப்பை, காவல்துறை அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார். அதாவது, இந்த போராட்டத்தில் 5க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமடைந்து இருப்பதாகவும், 54 நபர்கள் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நாளை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இதனால் கொழும்பு வாழ் மக்கள் நாளை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா என குழப்பத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்