இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினக்கூலி மக்கள் பலரும் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். தினமும் உண்பதற்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் சாப்பிட அரசி இல்லாததால் 12 அடி ராஜநாகத்தை வேட்டையாடி உண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 அடி ராஜநாகம் வேட்டை:
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறுபட்ட விதமான விஷப்பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேர் கொண்ட வேட்டைக்குழு ஒன்று 12 அடி ராஜநாகத்தை பிடித்து, கொன்று, தோள்களில் வைத்து போஸ் கொடுத்ததும் சமைத்து சாப்பிட்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதில் அவர்கள் சாப்பிட அரிசி கிடைக்காததால், காட்டிற்குள் சென்று ராஜநாகத்தை பிடித்து வந்தோம் என கூறியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோவால், அதிலுள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பாதுகாக்கப்பட்ட ஊர்வன சட்டத்தின் கீழ் உள்ள ராஜநாகத்தை கொல்வது ஜாமின் வழங்க முடியாத குற்றம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |