தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது மகளின் பிறந்தநாளை, இதுவரை யாரும் கொண்டாடாத உயரமான கட்டிடத்தின் மீது கொண்டாடியுள்ளார்.
உயர்ந்த இடத்தில் கொண்டாடட்டம்:
தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அவருக்கு ஸ்நேகா ரெட்டி என்ற மனைவியும்,இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதில் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளை நடிகர் அல்லு அர்ஜுனும்,அவரது மனைவியும் கொண்டாடியுள்ளனர்.
அதாவது,துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் கேக் வெட்டி தனது மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். தனியார் வசமுள்ள இந்த கட்டிடத்தில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், முதல் முறையாக அவருக்கு மட்டுமே இங்கு அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்