நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் குழுவினருக்கு சூர்யா தங்கக்காசு பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் மிதக்க செய்துள்ளார்.
பரிசளித்த சூர்யா:
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் ரிலீசானது. இந்த படம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலை துறையினரிடம் பாராட்டை குவித்து வருகிறது. இதனை அடுத்து சூர்யா தனது அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் படு மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தனது படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை நடிகர் சூர்யா அளித்துள்ளார். அதாவது எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருக்கு தங்க காசு பரிசளித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு என்று கமெண்ட் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்