நடிகர் ஆர்யன் கானுக்கு ஒரு வழியாக ஜாமீன் கிடைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து இவர் நாளை அல்லது நாளை மறுநாள் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியே வந்த ஆர்யன் கான்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து பல கட்டமாக அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒரு வழியாக, பலகட்ட இழுத்தடிப்பு களுக்கு பின்பு இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
அவரோடு சேர்ந்து அவரது 2 நண்பர்களும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி விடுமுறை காரணமாக, இந்த இரண்டு நாட்களுக்குள் இவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லை எனில் இவர் இன்னும் ஒரு வாரத்திற்கு சிறையில் இருந்து இருக்க வேண்டியிருக்கும். தற்போது இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், இவர் சிறையிலிருந்து நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்