தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியுள்ள ரஜினிகாந்த், திரைத்துறையில் உயர்ந்ததாகக் கருதப்படும் தாதா சாகேப் என்ற உயரிய விருது பெற டெல்லி செல்கிறார்.
விருது பெறும் ரஜினி:
தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மக்களால் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், பல விருதுகளை பெற்று புகழுடன் விளங்குகிறார். இந்த வகையில், இந்திய நடிகர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிட பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விழா தள்ளிப்போனது. இந்த நிலையில், இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள ரஜினி இந்த விருது நான் எதிர்பாராதது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்