தெலுங்கில் புகழ் பெற்ற நடிகர் அல்லு அர்ஜுனை, துபாயில் சந்தித்த கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவருக்கு முக்கிய பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு பரிசு:
தெலுங்கு பட உலகில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் இவரது “புட்ட பொம்மா” என்ற பாடல் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து, தற்போது இவர் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், இவருக்கு கதாநாயகியாக ராஷ்மிகாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அங்கு அவரைச் சந்தித்த பிரபல கேரள தொழிலதிபர் ரியாஸ் கில்டன் என்பவர், 150 ஆண்டு கால பழமையான துப்பாக்கி ஒன்றை அவருக்கு பரிசளித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்