மாலை நேரங்களில் நாம் டீ குடிக்கும் வேளையில் ஏதாவது ஒரு தின்பண்டம் சாப்பிடுவது என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அதிலும் எண்ணெயில் பொரித்தெடுத்து உணவுகள் என்றால் அனைவருக்கும் அதீத ஆசை தான். அந்த வகையில் தற்போது நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளது மட்டன் கீமா வைத்து செய்யக்கூடிய ஒரு வகை சமோசா.
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா – 500 கிராம்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சோள மாவு – 2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
சமோசா ரோல் – 5
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் சுத்தம் செய்து வைத்து உள்ள மட்டன் கீமாவை சேர்த்து வதக்க வேண்டும். மட்டன் கறியில் இருந்து வரும் தண்ணீர் வைத்து கீமாவின் நிறம் மாறும் வரை வேக விட வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கீமாவை கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நன்கு வேக விட வேண்டும்.
அதன் பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கி விடவும். இதையடுத்து சமோசா ரோலை எடுத்து சமோசா வடிவத்திற்கு சுருட்டி அதில் செய்து வைத்து உள்ள கீமா கலவையை உள்ளே அதன் ஓரங்களில் சோள மாவு மற்றும் தண்ணீர் கலந்த கலவையை பசை போன்று பயன்படுத்தி சமோசா வடிவத்திற்கு இட்டு கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ஒன்றின் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது சுவையை மொறுமொறு சமோசா ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்