பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வருபவர் ரோஷினி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் மரக்கிளைகளுக்கு இடையே சிரித்தபடி கியூட் போஸ் கொடுத்து உள்ளார்.
விஜய் டிவியில் ஒரு சில வருடங்களாக பல்வேறு வித காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலின் பல முக்கிய கதாபாத்திரங்களில் இதுவரை சின்னத்திரைக்கு பரிச்சியமாகாத புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். அதாவது கதையின் நாயகன் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலியாக கண்மணி, அகிலன் என பல முக்கிய கதாபாத்திரங்களில் புது முகங்கள் நடித்து வருகின்றனர்.
எனினும் இந்த சீரியல் எப்பொழுதும் டாப் நிலையில் தான் இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் தற்போதைய நிலவரமாக வெண்பா சூழ்ச்சியால் எட்டு வருடங்களுக்கு முன்பு தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அதனால் அவரை பிரிந்து வாழ்கிறார் பாரதி. இந்நிலையில் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.
அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தெரியாமல் சௌந்தர்யா எடுத்து சென்று வளர்க்கிறார். இந்நிலையில் தற்போது தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மையை அறிந்து கொள்ளும் கண்ணம்மா அது பற்றிய உண்மையையை தன் மாமியார் சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.
இவ்வாறு பல்வேறு விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியலின் நாயகி கண்ணம்மா தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தென்னை மரத்தின் கிளைகளுக்கிடையே இருந்து எட்டி பார்த்தபடி உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்