தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் பல இடங்களில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு (ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை) பின்வரும் மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருவண்ணாமலை, சேலம், மற்றும் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை  ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here