பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா போவதற்கு இடம் இல்லாமல் தவித்து கொண்டிருக்க புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் வீட்டிற்கு வந்து தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால் மூர்த்தி கதவை சாத்தி விட்டு வெளியே துரத்தி விடுகிறார். மேலும் கண்டபடி பேசி விடுகிறார். இதனால் கண்ணன் மனதுடைந்து அங்கிருந்து சென்று விடுகிறார்.
மீனாவிற்கு இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மேலும் உதவியும் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளார். கதிருக்கு கண்ணனை நினைத்தால் பாவமாக உள்ளது.
இப்படி சீரியல் நகர்ந்து கொண்டிருக்க தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கண்ணன் செல்ல வழியில்லாமல் திணறிக்கொண்டிருக்க முல்லை தன் அப்பாவிற்கு கால் செய்து கண்ணனை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி சொல்கிறார்.
அவன் சாப்பிட்டு இருக்க மாட்டான். நம்ம வீட்டுல வச்சுக்கோங்க என்று சொல்கிறார். அதற்கு அவரும் ஒத்துக்கொள்ள கண்ணனை வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடும் போடுகிறார். கண்ணன் கண்கலங்கிக்கொண்டே சாப்பிட இந்த காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்