டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது. அசல் கொரோனா வைரஸை விட 1000 மடங்கு ஆபத்தானது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்கா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரே தலைவலியாக இருப்பது கொரோனா. கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிக்கப்பட்டாலும் காலத்திற்கு ஏற்ப இந்த வைரஸ் மாறுவது மற்றொரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாம் அலை தற்போது நீடித்து வரும் நிலையில் மூன்றாம் அலை பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது எனவும் உண்மையான கொரோனா வைரஸை விட இது 1000 மடங்கு ஆற்றல் மிக்கது எனவும் அமெரிக்கா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்புசி மக்களுக்கு செலுத்தப்பட்டாலும் 90% பாதுகாப்பை மட்டும் வழங்குவதாக அந்த ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்