‘கண்ணம்மா வீட்டுல ஹேமாவை விடுறதுக்கு உன்கிட்ட கேக்கணும்னு அவசியமில்லை’ – வெண்பாவை விளாசிய பாரதி!!

0
barathi kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்ற விஷயம் வெண்பாவிற்கு தெரியவர அதற்கு கோவமடைகிறார். மேலும் சௌந்தர்யா குழந்தைகளை வெளியில் அழைத்து செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது. பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோசமடைகிறார். மேலும் சௌந்தர்யா லட்சுமி மற்றும் ஹேமாவை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார்.

barathi kannamma

அடுத்ததாக வெண்பா பாரதிக்காக காத்துக்கொண்டுள்ளார். அதுவும் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ள விஷயம் தெரிந்து மிகவும் கோவத்தில் உள்ளார். அப்பொழுது பாரதி வந்து விட தன் நண்பனை பார்த்து விட்டு வந்ததாக சொல்கிறார்.

barathi kannamma

கண்ணம்மா வீட்டிற்கு சென்றதை பற்றி கேட்க பாரதி கோவமடைகிறார். ஆனாலும் விடாமல் வெண்பா கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளார். அவளுக்கு மட்டும் தான் சுயமரியாதை இருக்கா?? உனக்கு இல்லையா?? என்று கேட்கிறார். நான் என் பொண்ணு ஹேமாவை தான் பார்க்க போனேன் என்று சொல்கிறார்.

வெண்பா தன்னிடம் கேட்காமல் எதற்கு ஹேமாவை அங்கு தங்க வைத்தாய் என்று கேட்கிறார். அதற்கு பாரதி உன்கிட்ட சொல்லிட்டு செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக சௌந்தர்யா ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு ஹேமா சௌந்தர்யாவை அழைத்து வருகிறார். அப்பொழுது அவர்கள் பிறந்த தேதியை பற்றி பேசிக்கொண்டிருக்க இருவரும் ஒரே வருடத்தில் ஒரே நாளில் பிறந்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் இருவரும் ஷாக்காகின்றனர்.

அதன் பிறகு அஞ்சலி தன் நிலையை நினைத்து வருத்தப்படுகிறார். குழந்தை பிறந்ததும் தான் இறந்து விட்டால் அகிலன் நிலை என்னாகும் என்று யோசிக்கிறார். மேலும் அகிலனை அழைத்து எனக்கு எதாவது ஆனால் வேறு திருமணம் செய்துகொள் என்று சொல்கிறார். இதனால் கடுப்பாகும் அகிலன் அஞ்சலியை கண்டபடி திட்டி விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here