2021 ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்னைலயில் மக்களிற்கான காலிறுதி பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னறியுள்ள பி.வி. சிந்து..
ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு 2020ஆம் ஆண்டே நடக்க வேண்டியது. கொரோனா பரவல் நோய் தொற்றின் அதிக பாதிப்பால் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதியில் இருந்து ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நடந்தாலும் இப்பொழுது இந்த போட்டி பல கட்டுப்பாடுகளுடனும் விதிமுறைகளுடனும் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பளு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அதன்பின் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் குத்துசண்டை போட்டியில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 – 69) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர்களை தொடர்ந்து மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது, இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பானின் அகனே யமாகுச்சி விளையாடினார். அப்பொழுது சிந்து யமகுச்சியை முதலில் 21 -13 என்று வீழ்த்தினார். பின் அதேபோல் 22 – 20 என்ற செட் கணக்கில் அகனே யமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். பி.வி. சிந்து முதலில் இருந்தே மிக சிறப்பாக திறமையாகத்தான் விளையாடி வந்தார். இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் அணைத்து போட்டிகளிலும் மிக நன்றக விளையாடி நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியினால் இவருக்கு பாராட்டும் பரிசுகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்