இந்திய மக்கள் தொகையில் 67% பேர் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டனர். 40 கோடி பேர் இன்னும் நோய்த்தொற்று ஆபத்தில் உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
உலக மக்கள் தொகையில் கணிசமான சதவீதம் இந்த கொரோனா தொற்றால் குறைந்துள்ளது. 2020 இன் தொடக்கத்தில் முதல் அலையால் திணறிய பல்வேறு நாடுகள் தடுப்பூசி தொடங்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. பின்னர் மார்ச் மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை தலைக்காட்ட தொடங்கியது. இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக இருந்தாலும் தடுப்பூசியால் இந்த தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு 70 மாவட்டங்களில், 6 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், 67 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது மூன்றில் இரண்டு இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது உறுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்