கொரோனவை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் நில நடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!!

0

மேகாலயா, லடாக், ராஜஸ்தான் போன்ற இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராஜஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலதில் பிகானிரி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 4.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் குறைந்த தீவிரத்தை கொண்டிருந்ததால், எந்த பாதிப்புகளையும் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வட கிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் மையம் தகவலின் படி ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.1 ஆக பதிவாகியுள்ளது.இவ்வாறு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here