கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் காமெடி நடிகர் வடிவேலு தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரித்தான பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமாவில் தற்போது பிரேக் விட்டு இருந்தாலும் மீம்களின் ராஜாவாக இணையத்தில் வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவரை பிடிக்காதவர்கள் தமிழகத்தில் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு தன் நகைச்சுவையால் மக்களை ஈர்த்தவர். தற்போது தமிழகம் கொரோனவால் சீர் குலைந்து உள்ளது. எனவே தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது வடிவேலு அவர்களும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், “எல்லாரும் மாஸ்க் போட்டுக்கோங்க. முன்னாடிலாம் ஊசி போடுய்யானு நம்ம சொன்னா, நாங்களாம் தேக்கு ண்ணே அண்ணே.. போயிட்டே இரு ண்ணே சொன்னவங்க கூட இப்போ வரிசைல நின்னு கொரோனா தடுப்பூசி போட்றாங்க. அது மிக மகிழ்ச்சியாக உள்ளது” என செய்தியாளர்களிடம் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பேசியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்