சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளை கடந்த போதும் வறுமை ஒளிக்கப்படவில்லை…!சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்!!!

0

சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சாலை பணிகள் மற்றும் அரசு கட்டுமான பணிகள் குறித்து பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் போது,  சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படை கல்வி வழங்க முடியவில்லை இது போன்றவை மிகுந்த வேதனையை தருவதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

சாலை அமைத்தல், நடைபாதை சீரமைத்தல், அரசு அலுவலகங்களின் கட்டுமானப் பணிகள் போன்றவற்றின் தரத்தை பரிசோதனை செய்யவேண்டும் என ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கு  விசாரணையின் போது, அரசு போடும் சாலை ஆறு மாதங்கள் கூட  நீடிப்பதில்லை எனவும், அதை அரசின் அதிகாரிகள் முறையாக சோதனை செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைப்பது குறித்த விதிகள் உள்ளதாகவும் அவற்றை அமல் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் இது போன்ற பணிகள் குறித்து உயர் நீதிமன்றம் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், மக்கள்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, முழுமையாக அடிப்படை கல்வி வழங்கப்படவில்லை என்றும், இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம்  ‘டேக் ஆப்’நிலையில் இருந்து எப்பொழுது ‘டேக் ஆப்’ ஆகும் என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here