பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய அப்டேட்டாக இதன் ரீமேக்கான தெலுங்கு சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. அதாவது அந்த சீரியலில் பாரதிக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா(கார்த்திகை தீபம்)
தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. தெலுங்கிலும் இந்த சீரியல் சூப்பர் ஹிட் தான். இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவிற்கு பதிலாக கார்த்திக் தீபா. பாரதி கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் நடித்து வருகின்றனர்.
இந்த கார்த்திகை தீபம் சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதாவது தீபா(கண்ணம்மா) மௌனித்தா(வெண்பா) போட்ட விஷ ஊசியால் அவரது கல்லிரல் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார். எப்படியும் தீபாவை(கண்ணம்மா) காப்பாற்றியாக வேண்டும் என்று கார்த்திக்(பாரதி) தனது நண்பன் மருத்துவமனைக்கு செல்கிறார்.
அப்பொழுது கண்ணம்மாவுடன் இணைத்து இத்தனை நாள் சம்மந்தபடுத்தி பேசிக்கொண்டிருந்த வருணின் மனைவி மருத்துவமனைக்கு வருவதை பார்க்கிறார். அங்கிருக்கும் டாக்டரிடம் என்ன நடந்தது என்று கேட்க வருணுக்கு குழந்தை பிறக்க தகுதி இல்லாததை சொல்கிறார். உடனே பாரதிக்கு ஷாக்காகிறது.
அப்போ கண்ணம்மாவை இத்தனை நாள் நம்ம சந்தேகப்பட்டது தப்பா?? அந்த 2 குழந்தையும் நமக்கு பிறந்தது தானா?? என்று கதறுகிறார். ரோட்டில் இத்தனை நாட்கள் தான் செய்த கொடுமையை நினைத்து பார்க்கிறார். தீபாவின்(கண்ணம்மா) காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீட்டிற்கு வர அப்பொழுது கண்ணம்மா உயிருக்கு போராடிய நிலையில் இருக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamடர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்