கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. பலியின் எண்ணிக்கைகள் அதிகளவில் குறைந்துவிட்டன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசிகள் நிலை பற்றி கடிதம் எழுதியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் மோடிக்கு கடிதம்…
கொரோனா 2ஆம் அலை பரவலால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்தனர். தொற்று பரவல் காலத்தில் அரசு பல முடிவுகள் மேற்கொண்டு வந்து கொரோனா தாக்கத்தை குறைத்து வந்தது. பல போராட்டங்கள் பின் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் மக்கள் அனைவர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது, ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் தடுப்பூசி வழங்குவதில் தயக்கம் காட்டி வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இன்னும் இருந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதைப்பற்றி மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திற்கு 1கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்றத்தாழ்வு காட்டி வருகிறது. ராஜஸ்தான், கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு 1000 பேருக்கு 533, 493, 446 கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது, ஆனால் தமிழகத்திற்கு 100 பேருக்கு 302 தடுப்பூசி வழங்குவது மிக வேதனை அளிக்கிறது என்றும் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமான அளவு இல்லை, இதை சரி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்