கொரோனா இரண்டாம் அலை நாடு எங்கும் பரவி அரசு மற்றும் மக்களுக்கு பல்வேறு வித பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் மாநில முதல்வர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அந்த வகையில் வருகிற ஜூலை 16 தேதி தென் மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதையும் ஆட்கொண்டு நிலைகுலைய வைத்து வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது தடுப்பூசிகளை உற்பத்தி செய்தல் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தல், மக்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து பாதுகாத்தல். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பல தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தற்போது மெல்ல மெல்ல கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்களுடன் ஜூலை 16ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதில் கொரோனா தடுப்பூசிகள், கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்வார் என தெரிகிறது. மேலும் மாநில முதல்வர்களும் தடுப்பூசி தொடர்பாக ஒரு சில கோரிக்கைகளை முன் வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்