விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாக்யலக்ஷ்மி சீரியலில் நடித்து வந்த எழில் தற்போது தர லோக்கல் கெட்டப்பில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி எழில்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா பாக்கியா பார்த்து வைத்த வீட்டையே வாங்கி பூஜை அனைத்தையும் முடித்து விட்டார். பாக்கியா வீட்டில் இருந்து அனைவருமே இந்த விசேஷத்திற்கு வருவதால் கோபி வேண்டும் என்றே தாமதமாக வந்து என்னை விட உன் தோழி டீச்சர் தான முக்கியம் என்று சொல்கிறார்.
தற்போது ராதிகாவை வேறு இந்த சீரியலில் மாற்றி இருப்பதால் பலரும் கடுப்பாகியுள்ளனர். மேலும் சீரியல் சில தினங்களாக சுவாரசியம் குறைந்து காணப்பட்டு வருகிறது.
இது நாள் வரை முதல் இடம், இரண்டவது இடம் என்று மாறி மாறி வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கமெண்ட் செக்சனில் கூட ராதிகா கதாபாத்திரத்தை மாற்றும் படி கேட்டு வருகின்றனர்.
மேலும் ராதிகா. கோபி மற்றும் பாக்கியாவை தாண்டி ஒரு முக்கிய கதாபாத்திரன் உள்ளது. அவர் எழில். அம்மாவின் மீது அதிக பாசமாகவும், அதே நேரத்தில் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றும் மகனாகவும் இருந்து வருகிறார்.
இந்த கதாபாத்திரத்திற்காக தான் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் தர லோக்கலான கெட்டப்பில் களமிறங்கியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.