தமிழ் நாட்டின் சென்னை உட்பட பல இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இன்று பகலிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, தேனி, வேலூர், கோவை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆகிய 8 நகரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் மக்களை எச்சரித்துள்ளது. வருகிற 12 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்