மௌன ராகம் சீரியலில் தற்போது மறுபடியும் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
மௌன ராகம்
மௌன ராகம் சீரியலில் சக்திக்கும் வருணுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென போடப்பட்ட நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் பலரும் சோகத்தில் இருந்தனர்.
மேலும் சீரியல்கள் அனைத்தும் தொடங்கிய நிலையில் மௌன ராகம் மட்டும் தொடங்கவே இல்லை. இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.
ஆனாலும் சீரியல் குழுவிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவே இல்லை. இந்நிலையில் தான் சக்தி வருண் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. கூடிய விரைவில் சீரியல் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை கேட்டதும் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
மேலும் இதனை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மீண்டும் இந்த சீரியல் இரவு 10 மணிக்கு வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.