தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபியின் பதவி காலம் நாளையுடன் முடிய இருப்பதால் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு அந்த பதவிக்காக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு..
தமிழத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி பதவி வகித்து வருகிறார். அவரின் பதவி காலம் நாளையுடன் நிறைவு பெற இருப்பதால் புதிய டிஜிபிக்கான தேர்ந்து எடுக்கும் வேலைகள் நடைபெற்று வந்தது அதன் அடிப்படையில் யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியலின் படி சைலேந்திரபாபு புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு வருவதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இந்த பதிவிக்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அணுப்பி வைத்தது. அந்த பட்டியலில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் .
மத்திய அரசிடம் இருந்து வந்த தேர்வு செய்யப்பட்ட பட்டியலின்படி புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்ததாக தமிழக அரசு அறிவித்தது.1987ஆம் ஆண்டு சைலேந்திர பாபு ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்தார். பின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கினர். அதற்குப்பின் துணை ஆணையர், இணை ஆணையர்,ஆணையர், வடக்கு மண்டல ஐஜி, சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. என்று பல பதவிகளை பெற்று சிறப்பாக நேர்மையாக முன்ன்றி இப்பொழுது இந்த பட்டாஹ்வுக்கு வந்துள்ளார். இனி 2 ஆண்டுகளுக்குக் டிஜிபி பதவியில் சைலேந்திரபாபு இருப்பார்.நாலா 12 மணியளவில்டி ஜிபியாக பொறுப்பேற்க உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்