விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஒடுபாதையில் குதித்த பயணி – விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!

0
விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஒடுபாதையில் குதித்த பயணி - விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!
விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஒடுபாதையில் குதித்த பயணி - விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!

அமெரிக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட விமானத்தில் இருந்து ஓடுபாதையில் திடிரென்று குதித்த பயணி.உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பயணி அத்துமீறி விமானத்தில் இருந்து குதித்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஓடுபாதையில் குதித்த பயணி..

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து ஸ்கைவெஸ்டால் நிறுவனத்தால் இயங்கும் யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானம் 5365 ரக விமானம் ஒன்று சால்ட் லேக் என்ற ஊருக்கு புறப்பட்டது. ஒரு 7 மணியளவில் விமானத்தின் சோதனை ஓட்டத்தை முடித்தபின் பயணிகளை விமானத்தில் ஏறி அமர அறிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் ஏறி அவர்களது இருக்கையில் அமர்ந்தனர். பின் விமானம் புறப்பட்டு ஓடுபாதயிலிருந்து வானில் ஏறும் நேரம் பார்த்து பயணி ஒருவர் திடிரென்று விமானத்தின் எமெர்ஜென்சி வாயில் கதவை திறந்து அதன் வழியாக ஓடுபாதையில் குத்திவிட்டார்.

விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஓடுபாதையில் குதித்த பயணி..
விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஓடுபாதையில் குதித்த பயணி..

இதனை கவனித்த விமான ஒட்டி விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலையத்துக்கு அறிவிப்பை அளித்துள்ளார். பின் மீட்பு பணிகள் வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணியை அழைத்து மருத்துவ உதவி கொடுத்து மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன்பின் விமானத்தை எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதித்தனர், அதில் வேற யாருக்கும் எது நடந்துள்ளதா காயம் ஏதும் பட்டுள்ளதா எதனால் இவர் குதித்தார் என்று மற்ற பயணிகளிடம் விசாரணை நடத்தினர், அதில் அவர்கள் கூறியது என்னவென்றால் விமானம் புறப்படுவதற்கு முன்னே விமானிகள் உள்ள அறைக்கு சென்றார் ஆனால் உள்ள செல்ல முடியவில்லை பின் இருக்கைக்கு வந்துவிட்டார் எனவும், பின் விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் அவர் தன் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தது விமானத்தை இயக்கும் காக்பிட் கதவை திறக்க முற்பட்டார் என்றும் கூறினார்கள். விசாரணைக்கு பின் அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்திலும் பயணிகள் மத்தியிலும் பெரும் .பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here