கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுகவும். மேலும் கொரோனாவை பற்றிய வதந்திகளும் பரவி வருகின்றன. அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா பரவுமா?? என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. அதை பற்றி பார்ப்போம்.
கொரோனா
கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பொருட்களைத் தவிர்ப்பது முதல், வெளியே சாப்பிடுவதைத் தவிர்ப்பது வரை மக்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த பயம் இறைச்சி மற்றும் கோழிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வைத்துள்ளது. மக்கள் சைவ உணவுகளுக்கு மாறுகிறார்கள்.
சைவ உணவு
சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுவது உங்களை கொரானாவில் இருந்து பாதுகாக்குமா என்ற கேள்விக்கு ஒரே பதில் ‘இல்லை’ என்பதுதான். கொரோனா வைரஸ் என்பது சுவாச நோய்த்தொற்று ஆகும், இது காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி எந்த வைரஸும் இறைச்சி அல்லது கடல் உணவுகளில் எவ்வாறு தங்கி அதை உண்பதற்கு தகுதியற்றதாக்குகிறது என்பதைப் பற்றிய எந்த தொடர்பும் இல்லை. முட்டைக்கும் இது பொருந்தும்.
சமைக்கும் முறை
எந்தவொரு இறைச்சியையும் கிருமிகளை மற்றும் நோய்களை உண்டாக்கும் வைரஸ்களையும் கொல்ல முழுமையான சமையல் செயல்முறைக்கு (குறைந்தபட்சம் 30 நிமிடங்கள்) உட்படுத்தப்பட வேண்டும் என்று எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. COVID-19 ஐப் போன்ற SARS வைரஸைக் கொல்வதில் இதே வழிமுறை கண்டறியப்பட்டது. கடல் உணவுகளுக்கும் இது பொருந்தும், அவற்றின் முழுமையான சமையல் செயல்முறை நேரத்திற்கு அவை உட்படுத்தபட வேண்டும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |